search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுரை ஸ்மார்ட் சிட்டி"

    • பெரியார் பஸ் நிலையத்தின் நடுவே அமைக்கப்பட்டுள்ள புல்வெளி பூங்காக்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை.
    • பஸ் நிலைய வளாக பகுதிகளில் பயணிகள் உட்காருவதற்கு வசதியாக இருக்கைகள் அமைக்கப்படவில்லை.

    மதுரை:

    மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளின் கீழ் பெரியார் பஸ் நிலையத்தில் நடைபெற்று வருகின்ற பணிகளை மத்திய சமூக நலத்துறை இணை மந்திரி நாராயணசாமி இன்று பார்வையிட்டார். பின்பு அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மத்திய அரசு நிதி ஒதுக்கீட்டின் அடிப்படையில் மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் நடந்து வருகின்றது. மதுரையின் மையப் பகுதியான பெரியார் பஸ் நிலையத்திற்கு தினமும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர்.

    பெரியார் பஸ் நிலையத்தின் நடுவே அமைக்கப்பட்டுள்ள புல்வெளி பூங்காக்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை. மேலும் பெரியார் பஸ் நிலையத்தில் உள்ள கழிப்பறைகள் முறையாக சுத்தம் செய்யப்படவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஆகையால் தனியார் நிறுவனம் வாயிலாக கழிப்பறை தூய்மை பணி மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதைத்தவிர பஸ் நிலைய வளாக பகுதிகளில் பயணிகள் உட்காருவதற்கு வசதியாக இருக்கைகள் அமைக்கப்படவில்லை. ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் மிகவும் மந்தமான நிலையில் நடைபெறுகிறது. பெரியார் பஸ் நிலையத்தில் குற்றசெயல்களை தடுப்பதற்கு அதிக அளவில் தெரு விளக்குகள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். எனவே அதிகாரிகள் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

    மத்திய அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுகின்ற வகையில் அதிகாரிகள் செயல்படக்கூடாது. எனவே பெரியார் பஸ் நிலையத்தில் நடைபெற்று வருகின்ற ஸ்மார்ட்சிட்டி திட்ட பணிகளை அதிகளவு வேலையாட்களை கொண்டு விரைந்து நடத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது மாநகராட்சி ஆணையாளர் பிரவீன் குமார், பா.ஜ.க. நிர்வாகிகள் பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள், மாவட்ட பார்வையாளர் கார்த்திக் பிரபு, மாவட்ட செயலாளர் சகாதேவன், நலத்திட்ட பிரிவு செயலாளர் சதீஷ் ஆசாத், ஊடகப் பிரிவு தலைவர் ரவிச்சந்திர பாண்டியன் உள்பட ஏராளமான நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    மதுரையில் இன்று ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதில் பங்கேற்ற பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, இன்னும் 18 மாதங்களில் மதுரை நகரம் ‘சிட்னி’யாக மாறும் என்று கூறினார். #SmartCity #MaduraiSmartCity #ministersellurraju

    மதுரை:

    மதுரையில் இன்று ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதில் பங்கேற்ற அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:-

    மறைந்த முதல்வர் அம்மா மதுரை நகரை சர்வதேச நகரமாக மாற்ற பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார். அவரது வழியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு தமிழக மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை செயல் படுத்தி வருகிறது.

    அனைத்து தரப்பு மக்களும் நலமுடன் வாழ தேவையான வசதிகளை அரசு செய்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு சிட்னி நகரை போல் மதுரையை சர்வதேச நகரமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினேன். இதை சிலர் ஏளனமாக பேசினார்கள். சமூக வலைதளங்ககளில் கொச்சை கருத்துக்களும், கேலி கிண்டல்களும் செய்யப்பட்டன.

    ஆனால் இன்று ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரை நகர் இடம் பெற்று அதற்குரிய வகையில் பெரியார் பஸ் நிலையம், மீனாட்சி அம்மன் கோவில், நாயக்கர் மகால் போன்ற பகுதிகள் மேம்படுத்தப்பட்டு மதுரை நகரம் நவீனமயமாக்கப்பட உள்ளது.

    இன்னும் 18 மாதங்களில் இந்த திட்டப்பணிகள் முடிவடையும். இது நிறைவு பெற்றபின் நான் கூறியது போல் மதுரை நகரம் சிட்னியாக மாறும். எனவே மக்கள் நலம் பேணும் இந்த அரசுக்கு பொதுமக்கள் துணை நிற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களின் உரிமைகளை பேணும் பாதுகாவலராக செயல்பட்டு வருகிறார். மறைந்த முதல்வர் அம்மா வழியில் அவர் சிறப்பான ஆட்சி நடத்தி வருகிறார்.

    முதல்வர் விவசாய குடும்பத்தில் பிறந்தவர் என்பதால் அடித்தட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு மதிப்பு அளித்து அனைத்து திட்டங்களையும் மக்கள் பயன்படுத்தும் வகையில் செயல்படுத்தி வருகிறார்.

    முதல்வரும், துணை முதல்வரும் இரட்டை குழல் துப்பாக்கியாக இருந்து இந்த ஆட்சியை நடத்தி வருகிறார்கள். துணை முதல்வர் மதுரையை தனது தாய் மண் போல் நேசிக்கிறார். தேனியை விட மதுரையில் பல்வேறு திட்டங்களை கொண்டு வர முனைப்புடன் பணியாற்றி வருகிறார்.

    வருகிற 27-ந் தேதி பிரதமர் மோடி எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழாவுக்காக மதுரை வருகிறார். தென் மாவட்ட மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான எய்ம்ஸ் ரூ. 1,300 கோடியில் தோப்பூரில் அமைய உள்ளது. இது நமக்கு கிடைத்த வரப்பிரசாதம் ஆகும்.

    மதுரை மண்ணுக்கு வளர்ச்சி திட்டப்பணிகள் நாளுக்கு நாள் வந்துகொண்டே இருக்கிறது. இதை செயல்படுத்தி மக்கள் நலன் காக்கும் இந்த அரசுக்கு மக்கள் துணை நிற்க வேண்டும் என்றார். #SmartCity #MaduraiSmartCity #ministersellurraju

    ×